Wednesday, December 30, 2009

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - வரவேற்போம்!

புத்தாண்டு நாள் முதல் திருநெல்வேலி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப் படுத்த மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயராமன் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்று இன்றைய செய்திகளில் படித்த உடன் தோன்றியது இந்த பதிவு. இந்த வருடம் கோடை விடுமுறையில் திருநெல்வேலி சென்றிருந்த பொது தென்பட்ட மாற்றங்களில் பிளாஸ்டிக் உபயோகமும் ஒன்று.

மாலை வேளைகளில் லாலா கடை (sweet store ஐ திருநெல்வேலியில் இப்படி தான் கூப்பிடுவோம்!) முன்னால்  கூடி உலகப் (?) புகழ் வாய்ந்த திருநெல்வேலி அல்வாவை சூடாக 50 கிராம் வாங்கி சாப்பிட்டு விட்டு கொறிக்க கொஞ்சம் காரமும் வாங்கி செல்வது நெல்லை மக்களின் பொழுதுபோக்குகளில் ஒன்று. நெல்லை டவுன் இருட்டுக்கடை, ஜங்ஷன் சாந்தி ஸ்வீட்ஸ், லக்ஷ்மி விலாஸ் என்று பிரபலமான  கடைகளின் முன்னால் பெரிய கூட்டத்தையே காணலாம்.  சில வருடங்களுக்கு முன்னால் வரை  இந்த சூடு அல்வா வாழை இலையில் தான் தரப் பட்டு வந்தது. சூடான அல்வா வாழை இலையில் மிதக்கும் அழகே தனி தான். ஆனால் தற்போது அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பேப்பரில் தான் அல்வா வழங்கப் படுகிறது. அனைத்து ஹோட்டல் களிலும் இதே கதை தான். இட்லி, சட்னி பார்சல் செய்ய உபயோகிக்க பட்ட வாழை இல்லை எல்லாம் போய் எங்கும் பிளாஸ்டிக் மயம். சூடாக எந்த பொருட்களையும் பிளாஸ்டிக் உடன் உபயோகிக்க கூடாது என்பது அறிவியல் பூர்வமான உண்மை. அறியாமை மற்றும் அறிவுறுத்தல் இல்லாமை காரணமாக இதை பலர் கண்டுகொள்வதில்லை. மேலும், நெல்லை மாவட்டத்தில் ஒரு ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு செல்லும் வழியில் உள்ள காலி இடங்களில் எல்லாம் பிளாஸ்டிக் பை பறந்து கொண்டு இருக்கிறது. மத்த ஊர்களிலும் நிலைமை வித்தியாசமாக இருக்காது என்று நினைக்கிறேன்.

இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, இன்றைய செய்தி மிகவும் நல்ல செய்தி என்று தோன்றுகின்றது. நெல்லை மாவட்டத்தின் பெரிய துணி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் அனைத்தும் இந்த உத்தரவிற்கு ஆதரவு அளித்துள்ளது ஆட்சியரின் முயற்சிக்கு வெற்றி. இந்த முயற்சி வெற்றிகரமாக நடைமுறைப் படுத்த பட்டால், மற்ற இடங்களிலும் இதைப் பின்பற்ற முயற்சி எடுக்கப் படும் என்று நம்புகிறேன். நம் பொதுமக்களும் அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் இதற்கு ஒத்துழைப்பார்களா? அடுத்த முறை நெல்லை செல்லும்போதோ இல்லை அங்கே விசாரித்தோ சொல்லுகிறேன்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!
(பி.கு. இங்கே வந்து படித்து செல்லும் நண்பர்கள் தங்களது கருத்துகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்! நன்றி!!)

5 comments:

Anto said...

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்..... உண்மையிலேயே இது மிகவும் அவசியமான ஒன்று..... அனைத்து மாவட்டங்களிலும் கட்டாயமாக்க பட வேண்டும்........... திருநெல்வெலி ஆட்சியருக்கு நம் வாழ்த்துக்கள்!!!!!!!

gopal said...

If a plan like this need to succeed in the long run rather than just as an eye-catching advt or gimmick, it should be a long drawn effot with a vision. What we have often seen or realized is that, while prohibitory orders are welcome measures, more often it fails at the implementation level. The initial enthusiasm is gradually lost and the purpose is squarely defeated. There are also some people from business interests who will stoop to all levels to ensure the failure of the plans to ban the use of plastics.

On the other hand, if proper education on the harmful effects of plastics is imparted at all levels right from middle school going kids to elders learning at the "Arivoli Iyakkam" centers, banning may not be necessary at all. It will take time to impart this education and hence the solution will not be easy at the beginning but once the solution is found, it will be ever lasting.

அருமையான எருமை said...

Dear Gopal,
Thanks for your comments. Yes, I agree that proper education about the harmful effects of plastic is needed. That will be a long lasting solution, but will definitely take a longer time. With the current rate of usage of plastic goods, I am not sure whether we have that luxury of time! I feel some drastic action is also necessary!

Ezhavathu manithan said...

AtchiALar sonnA mattum pOdhumA? idhukku appuram unga ooru vaarld pamous kadaigaL la ippO edhula (yArukku?) alwa kodukkarAnga nnu visArichu sollungaLEn?

cheena (சீனா) said...

தமிழகம் முழுவதும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் உள்ளன் - தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது - இருப்பினும் நடைமுறைச் சிக்கல் - முழுவதுமாக தடை செயலில் இல்லை.

நல்லதே நடக்கும் - நம்புவோமாக - நல்வாழ்த்துகள் நண்ப