Friday, September 10, 2010

நாளை, செப்டம்பர் 11, 2010!!!

செப்டம்பர் 11 என்பது அமெரிக்க வரலாற்றில், ஏன் உலக வரலாற்றிலயே ஒரு முக்கிய தினம் ஆகிவிட்டது, 2001 வருடத்திற்குப் பின். நாளை மீண்டும் ஒரு செப்டம்பர் 11. செப்டம்பர் 11 இங்கு பல குடும்பங்களுக்கு உணர்ச்சிபூர்வமான நாள். இந்த  வருடம் முந்திய சில வருடங்களை விட கொஞ்சம் சூடு அதிகம் தான் என்று படுகிறது. அதற்கு காரணங்கள் இரண்டு: முதலில் இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடத்திற்கு அருகில் வரப்போவதாக சொல்லப் படும் இஸ்லாமிக் சென்ட்டர். இதற்கு பலர்  எதிர்ப்பு, பலர் ஆதரவு. அமெரிக்காவில் இது ஒரு அரசியல் விஷயமாகவே கடந்த சில வாரங்களில் உருவெடுத்து விட்டது. இரண்டாவது, செப்டம்பர் 11 அன்று இங்கு ப்ளோரிடாவில் குரானை எரிப்போம், வாருங்கள் என்று ஒரு பாதிரியார் (Rev. Terry Jones) விடுத்த அழைப்பு. இதில் இந்த வருடம் செப்டம்பர் 11 அன்று தான் ரமதானும்.   ஜோன்ஸ்க்கு உலக அளவில் பலர் கண்டனம் தெரிவித்ததும் நேற்று குரானை எரிப்பதை கைவிட்டுவிட்டேன் என்று ஒரு தொலைக்காட்சியில் கூறியவர், இன்று இன்னும் அதைப்பத்தி யோசித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்று நம்ம ஊர் அரசியல்வாதி மாதிரி பல்டி அடிக்கிறார். 

எது எப்படியோ நாளை விநாயகர் சதுர்த்தி, ரமதான், செப்டம்பர் 11 மூன்றும் ஒன்றாக வருகிறது. அவைகளை நினைவூட்ட சில படங்கள் கீழே!! (அனைத்தும் கூகிள்-இல் இருந்து எடுத்தது தான்!). கொண்டாடுபவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். துக்கம் அனுஷ்டிப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இரண்டுமே செய்யப் போவதில்லை என்று கூறுபவர்களுக்கு இருக்கவே இருக்கு நம்ம தொலைக்காட்சிகள். கலைஞர் டிவியில் மட்டும் நாளை நான்கு படங்களாம் - அதுக்கே கிட்டத்தட்ட 16 மணி நேரங்கள் ஆகாது?. தூங்க, மற்றவைக்கு 8 மணி நேரம் - 24 மணி நேரம் முடிந்தது. அப்புறம் புள்ளையாராவது, செப்டம்பர் 11 ஆவது!!. நன்றி!



2 comments:

அப்பாதுரை said...

உங்கள் பதிவின் பெயர்க்கவர்ச்சியால் தூண்டப்பட்டு வந்தேன்
பதிவின் கருத்தும் கவர்கிறது.
பிள்ளையாருக்கும் க்ரௌன்ட் சீரோவுக்கும் பாலம் கட்டி விட்டீர்கள்!

Anonymous said...

பிள்ளையாருக்கும் க்ரௌன்ட் சீரோவுக்கும் பாலம் கட்டி விட்டீர்கள்!

2ayum inaikkum palam moonram pirai?