Wednesday, February 3, 2010

இவங்க தொல்லை தாங்க முடியலையே!!

நம்ம அப்துல் கலாம் ரிட்டைர் ஆயிட்டாரு, சந்திரயான் அண்ணாதுரையும் வேற ப்ராஜெக்ட்க்கு போய்ட்டாருன்னு  நம்ம ஊரு மீடியாக்கு கொஞ்ச நாளா எந்த விஞ்ஞானியும் சிக்காம கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டுத் தான் இருந்தாங்க. அவங்க வயித்துல பாலை வார்த்தது நம்ம (?!) நோபல் பரிசுக்காரங்க தான். வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்னு ஒரு தமிழர்க்கு (?!) இந்த வருட வேதியல் நோபல் பரிசைக் குடுத்து நம்ம பத்திரிக்கைகளுக்கு நல்ல தீனி போட்டாங்க. அவரு உட்கார்ந்தா நியூஸ், எழுந்திருச்சா நியூஸ்னு எல்லாரும் நல்லா கல்லா கட்டிட்டு இருந்தாங்க. இதுல லேட்டஸ்ட் நியூஸ், நேத்திக்கு அவருக்கு இங்கிலாந்துல ஒரு கம்பெனி iPhone குடுக்க மாட்டேன் ன்னு சொல்லி அதிகமா காப்பு தொகை (security deposit) கட்ட சொல்லிவிட்டதாம். நம்ம இனத்துக்கே இது இழுக்கு லெவல்ல இந்த நியூஸ்ல இருக்கிற அறிக்கைகளைப் படிச்சீங்கன்னா...என்னாத்த சொல்லுறதுன்னு தெரியலை!!!

முதல்ல, இங்கிலாந்துன்னு இல்லை, எல்லா மேற்கத்திய நாடுகளிலும் கார் லோன், வீட்டு  லோன், செல்போன்னு  என்னத்த  வாங்க போனாலும்  உங்க credit history என்னனு பார்த்திட்டு தான் கடனைக் குடுப்பாங்க. முத முதல்ல அமெரிக்கா வந்த புதுசுல ஒரு உருப்படியான credit card ஐ வாங்க நாம எல்லாரும் கொஞ்சம் கஷ்டப்பட்டிருப்போம். இருக்கிறதுலயே வெட்டியான பேங்க் தான் முதல்ல நமக்கு கார்டு குடுப்பான். (அந்த வங்கிகள்ல பாதிக்கு மேல இப்ப மூடியாச்சுன்னு வச்சுகோங்க!). அதுவும் எனக்கு முதல்ல குடுத்த கார்டுல $200 லிமிட் இருந்தது..இதை வச்சுக்கிட்டு 2 கடைல போய் மளிகை எல்லாம் வாங்கினா லிமிட் வந்திரும். ஆனால், இங்க வந்து சில மாதங்கள் ஆன பிறகு, உங்களை நம்பி பணம் குடுக்கலாம்ன்னு பேங்க் காரன் நம்ப ஆரம்பிச்ச பிறகு, நீங்க போதும் போதும்ங்கற அளவுக்கு தினமும் கிரெடிட் கார்டு கம்பெனிகாரன் ஈமெயில், கொசுமெயில்ன்னு உங்களை வரிசை கட்டி நோக அடிப்பானுங்க. இது தான் அநேகமா எல்லா நாடுகளிலும் உள்ளது. இப்ப இதை எதுக்கு இங்க சொல்லி உயிரை வாங்குறேன்னு கேட்கிறீங்களா..இங்க தான் நம்ம நோபல் அண்ணன் வர்றாரு.

வெங்கி iphone புதுசு வாங்கலாம்னு முடிவு பண்ணி கேட்டபோது இவரது credit history சரி இல்லைன்னு சொல்லி அவரை கூடுதல் டெபாசிட் கட்ட சொல்லிட்டாங்களாம் இங்கிலாந்து போன் கம்பெனிக்காரங்க. உடனே, இவரு நான்தான் 10 வருஷமா இந்த நாட்டுல இருக்கிறனே, எனக்கு எப்படி credit history இல்லைன்னு சொல்லலாம், இது இனப் பாகுபாடு தான்னு அடிச்சு விட்டாரு!! ஹ்ம்ம்...இதை மீடியால சொல்லுறதுக்கு பதில் அந்த கம்பெனில கொஞ்சம் பொறுமையாக் கேட்டிருந்தா  விளக்கமா சொல்லிருப்பாங்களோ? விஷயம் என்னன்னா, இவரு பெயரை வெங்கட்ராமன்னு முழுசா எழுதாம வெங்கின்னு அப்ளிகேஷன்ல  சுருக்கி எழுதிருக்காரு போல. அதைப் பார்த்த அந்த கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ரெண்டும் வேற வேற ஆளுன்னு  நினைச்சு, இவருக்கு இங்க credit history இல்லைன்னு சொல்லிருச்சு. (இந்த சாப்ட்வேர்ஐ எழுதியது நம்ம ஊர்க்காரனா இருக்க சான்ஸ் இருக்குங்கறது வேற விஷயம்!!!). இது தான் அந்த போன் கம்பெனி தரப்புல குடுக்கப்பட்ட விளக்கம்.

இந்த மாதிரி பெயர் குழப்பம் ஒரு மிக மிக சாதாரண விஷயம். நம்மளை மாதிரி சடகோபன் சாயங்காலம்வந்தான், அமிஞ்சிக்கரை அருணாசலம் ன்னு பெரிய்ய்ய்யய்ய்ய்ய பெயரை வச்சிருக்கிற எல்லாரும் எதிர்கொள்வது தான். நாம பெயரை முழுசா எழுதினாலே அதுல தப்பு விடறது வெள்ளைக்காரங்களுக்கு கை வந்த கலை. இதுல போய் பெயரை சட்ஸ் சாய்வந்த்ஸ், அம்ஸ் அருண்ஸ் ன்னு நாமளே சுருக்கி வச்சுக்கிட்டு அதை கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கண்டுபிடிச்சிரும்னு நினைச்சேன்னு சொல்லுறது சின்ன புள்ள தனமா இருக்கு.

அதுவும் இது இன வெறியினால் தான் நடந்தது போன்ற மிக முக்கியமான வார்த்தைகள், அதுவும் ஒரு நோபல் பரிசு பெற்றவர்கிட்ட இருந்து, வருவதற்கு  முன் அவர் கொஞ்சம் பொறுமையை கடை பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். ஆமா...அவரு தான் நோபல் பரிசே வாங்கிட்டாரு, நாம சொல்லியா இதெல்லாம் கேட்கப் போறாரு! அதான் முதல்லயே சொல்லிருந்தனே...என்னாத சொல்லுறதுன்னே தெரியலை, போங்க!!

டிஸ்கி 1: சரி, இவ்வளவு விஷயங்களை விசாரிச்சு தானே கடன் குடுக்கிறாங்க, அப்புறம் ஏன் அமெரிக்கால வங்கிகள் எல்லாம் திவால் ஆகுதுன்னு கேட்டுராதீங்க!!!!
டிஸ்கி 2: மூணு வயசுலயே தமிழ்நாட்டை விட்டு இவரு போயிட்டாரே...இன்னமும் இவரை தமிழர்ன்னு சொல்லுறது கரீட்டான்னு  கேட்காதீங்க!!!

2 comments:

Unknown said...

Nobelee analum Adi sarukkum.Venki...kkkku vaai sarukkivitathu

அருமையான எருமை said...

நன்றி ராம்ஸ், இந்த விஷயத்துல கத்துகிட்ட பாடத்துக்கு அப்புறம் எதற்கெடுத்தாலும் இன வெறி ன்னு சொல்லாம இருக்காங்களா பார்ப்போமே!