Saturday, February 27, 2010

The Last House on the Left (2009) - விமர்சனம்

1972 வருடம் Wes Craven இயக்கி, இதே பெயரில் வந்த சூப்பர்-ஹிட் திரைப்படத்தின் மறுதயாரிப்பு தான் போன வருடம் வந்திருக்கும் இந்த படம். Wes Craven இப்போது தயாரிப்பாளர்! நேற்று Cinemax சேனலில் இரவு வந்ததைப் பார்த்தேன்.  1972 இல் வெளிவந்த போதே பல பிரச்னைகளை எதிர்கொண்ட படமாம். 1960 இல் Ingmar Bergman இயக்கத்தில் வெளிவந்த Virgin Spring என்ற Swedish படத்தின் தழுவல் தான் 1972 இல் வந்தது. பல நாடுகளில் தணிக்கைக்குழுவிடம்  மாட்டி படாத பாடு பட்டது போல! இளகிய மனது கொண்டவர்கள் இந்த படத்தைப்  பார்க்காமல் இருப்பது நல்லது!

நமக்கு மிகவும் நெருக்காமனவருக்கு தீங்கு விளைவிக்கப்பட்டால் நம்ம எல்லாருக்கும் கோபம் வரும். ஆனால் எவ்வளவு கோபம் வரும், அந்த கோபத்தில் என்னவெல்லாம் செய்யத் துணிவீர்கள் - இது தான் படத்தின் கரு. ஒரு டாக்டர், அவரது மனைவி மற்றும் டீன்-ஏஜ் மகள் மூவரும் விடுமுறைக்காக ஏரிக்கரையில், காட்டிற்குள் இருக்கும் அவர்களது விடுமுறை இல்லத்திற்கு செல்கிறார்கள். அந்த மகள் (Mari) அவர்களது காரை எடுத்துக்கொண்டு தனது நண்பியைப் (Paige) பார்க்க செல்கிறாள். நண்பியுடனும், அவளது நண்பனுடனும் (Justin) அரட்டை, போதைப் பொருள் என்று சென்றுகொண்டு இருக்கும்போது ஜஸ்டினின் தந்தை (Krug) மற்றும் 2 நண்பர்கள் அங்கு வருகின்றனர். இதில் க்ரூக் போலீஸ் கண்காணிப்பில் இருந்து தப்பி வந்தவன். 2 போலீஸ் அதிகாரிகளைக் கொன்று விட்டு அவனைத் தப்பிக்க வைத்தவர்கள் அவனுடன் இருக்கும் நண்பர்கள். இவர்கள் மூவரும் மரி, பைஜ் மற்றும் ஜஸ்டினை துன்புறுத்த ஆரம்பிக்கிறார்கள். மரியின் காரில் அனைவரும் தப்பி செல்ல முயலும் போது விபத்து நேருகிறது. அந்த காட்டில் க்ரூக் மற்றும் அவனது நண்பர்கள் பைஜ்-ஐ சித்திரவதை செய்து கொலை செய்கிறார்கள். மரியைக் கற்பழித்து  சித்திரவதை செய்யும் போது அவள் தப்பி ஓடுகிறாள். குண்டடி பட்டு ஏரியில் விழும் அவள் இறந்து விட்டாள் என்று நினைத்து மூவரும் கிளம்புகிறார்கள். மழை, புயல் என்று இருப்பதால் அருகில் தெரியும் ஒரே வீட்டில் சென்று உதவி கேட்கிறார்கள். அந்த வீட்டில் இருப்பவர்கள் மரியின் பெற்றோர்! மரியின் தந்தை டாக்டர் என்பதால் இவர்களுக்கு முதல்-உதவி செய்து இரவு அங்கு தங்க உதவி புரிகிறார்கள்.

ஆனால், மரி இறக்கவில்லை. கஷ்டப்பட்டு வீட்டை அடையும் அவளைக் காப்பாற்றி, தன் வீட்டில் தங்கி இருக்கும் மூவர் தான் இதற்கு காரணம் என்று பெற்றோர் தெரிந்துகொள்கின்றனர். மரியின் பெற்றோர் அந்த மூவரையும் எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதே மீதி கதை. சுத்தியலால் மண்டையை உடைப்பது, கத்தியால் வயிற்றைக் கிழிப்பது, தலை வெடித்து சிதறுவது, கற்பழிப்புக் காட்சி என பல கோரக் காட்சிகள் உண்டு. சில பல வெட்டுகளுக்குப் பின்னர் R ரேட்டிங் கொடுக்கப்பட்டு வந்த படம். கோரமானக் கொலை/வன்முறைக் காட்சிகள் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் இந்தப் படமும் பிடிக்கும். அதைத் தவிர வித்தியாசமாக எதுவுமில்லை. ஜஸ்ட் பாஸ் தான் - அதுவும் suspense-ஐ கடைசி வரை கொண்டு சென்றதால்!

1 comment:

மரா said...

சூப்பரா எழுதியிருக்கிறீர்கள். பைக்கை சத்யா பஜார்க்கு திருப்பிற்றேன். நன்றி.