Thursday, July 8, 2010

நன்றி, முரளி!

டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். கடந்த 15-20 வருடங்களில் உலகின் முன்னணி வரிசையில் இருந்த முரளி, ஷேன் வார்னே, கும்ப்ளே ஆகிய 3 சுழல்பந்து வீச்சாளர்களும் சாதித்தவை மிக அதிகம். மூவருமே 600 விக்கெட்களுக்கு மேல் எடுத்தவர்கள் - முரளி 792. இவர்களுக்கு அடுத்த படியாக அதிக விக்கெட் எடுத்த சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (355) தான். இதில் இருந்தே உலக கிரிக்கெட்டில் இந்த  மூவரின் ஆதிக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம். பந்து வீசும்போது பிதுங்கி வெளியே வருவது போன்ற கண்கள், பந்து அடிக்கப்பட்டாலும், விக்கெட் எடுத்தாலும் உதடுகளில் தொங்கும் சிரிப்பு போன்றவை முரளியின் அடையாளங்கள். பந்து வீச்சாளர்களில் அதிக பிரச்சனைகளைச் சந்தித்தவரும் கூட. இருந்தாலும், ஒரு நல்ல விளையாட்டு வீரர் ஓய்வு பெறப்போவது கிரிக்கெட் உலகிற்கு இழப்பே!

1 comment:

vamban said...

bishan singh bedi kitta karuthu kEttu apuram padhivu seidhirundhAl innum kaLai katti irukkum?